Vrindavan guruvayur
Vrindavan guruvayur

வணக்கம் மற்றும் அன்பான வாழ்த்துக்கள்!

flute and feather
மோகன்ஜி பாரத நலன் அமைப்பு (பாரத் வெல்ஃபேர் பவுண்டேஷன்) ஒரு சிறப்பான பணியை தொடங்கி உள்ளது. அது குருவாயூரப்பன் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்) கோவிலை அதே கீர்த்தி மற்றும் ஒளியுடன் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் மீண்டும் கட்டுவதாகும். இந்த திட்டம், கிருஷ்ணனின் பாலத் தோற்றத்தை (குருவாயூரப்பன்) அவர் குழந்தையாய் பிறந்து வளர்ந்த வ்ரஜ் பூமியுடன் ஐக்கியப்படுத்துகிறது.
இந்த பணியால் குருவாயூரப்பனின் உணர்வு உலகம் முழுவதும் பரவி, உண்மையான மெய்ஞான தேடலில் இருப்பவர்களுக்கு தொடர்பை வழங்கும் - கேரளத்தின் குருவாயூரில் இந்த பாக்கியம் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு சலுகை.
உங்களது இந்த தாராளமான ஆதரவு இந்த ஆன்மீக சரணாலயத்துக்கு ஒரு முக்கிய பங்காக இருந்து, இந்த தலைமுறைக்கு மட்டுமல்லாமல் வருங்கால தலைமுறையினருக்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வுக்கான கலங்கரை விளக்கமாக இது அமைந்திடும்.
Vrindavan Guruvayur Temple
கேரளாவின் முன்னணி வாஸ்து வித்யா கலைஞர்களில் ஒருவரின் வழிகாட்டுதல் படி, தந்திர சமுச்சாயா, வாஸ்து மற்றும் தச்சு சாஸ்திர கோட்பாடுகளின் அடிப்படையில், இந்த கோவில் கட்டட கட்டுமான பணி நடைபெறுகிறது. இவர்கள் பஞ்ச பிரகாரா மற்றும் ஷடாதரா கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இவை கட்டிடக்கலை வடிவமைப்பு மற்றும் இட திட்டமிடல் கருத்துக்கள் ஆகும். இந்த கோட்பாடுகள் கட்டிடகலை, இட பங்கீடு அதிலும் முக்கியமாக கோவில் கட்டிடம், ஆன்மீக கட்டமைப்புகளில் பிரபஞ்ச சக்தி, ஆன்மீக சின்னங்கள், ஒரு கட்டமைப்பின் புற அமைப்பு மற்றும் அதற்கு அப்பாற்பட்ட சக்திக்கு (மெட்டாஃபிசிக்ஸ்) இடையே உள்ள சமநிலையில் ஆழமாக வேரூன்றியுள்ளவை ஆகும்.
பஞ்ச பிரகாரா என்பது கோவில் கட்டிடத்தில் ஐந்து ஒருமைய சுற்று வழிகள் அல்லது ஒரு புனித அமைப்பை சுற்றிய பிரகாரத்தை குறிக்கிறது. இந்த சுற்று பிரகாரம் ஆன்மீக மற்றும் நடைமுறை குறிக்கோள்களுக்கானது. ஷடாதரா என்பது வாஸ்து-இணக்கமான கட்டிடத்தின் முக்கியமான ஆறு அஸ்திவார அல்லது ஆதார கோட்பாடுகளை குறிக்கிறது. இந்த கோட்பாடுகள் சுமூகமான சூழல் உருவாக சமநிலையில் இருக்க வேண்டிய குறிப்பிட்ட சக்திகளை குறிக்கிறது.

பிருந்தாவனத்தில் இந்த கோவில் அமைவதால் இந்த சிலையின் ஜீவன், சாராம்சம் தனது சொந்த இடத்திற்கே பரவுகிறது- வட பாரதத்தின் பிரஜ் பூமி. இங்கே தான் கிருஷ்ணன் பிறந்து தனது குழந்தை பிராயத்தை கழித்தார். கலியூகத்தின் தொடக்கத்தில் துவங்கிய கால சுழற்சியின் முடிவையும் இது வலியுறுத்தும்.

பிருந்தாவனத்தில் மோகன்ஜியின் குறிக்கோள் என்னவென்றால், ஆன்மீக முன்னேற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறை ஏற்படும் விதமாக கோவில் நகர சுற்றுசூழலை உருவாக்குவதே ஆகும். எனவே ஒருவரின் ஆன்மீக வளர்ச்சி அல்லது பாதை எதுவாக இருப்பினும், பக்தி பாதை (வழிபாடு), ஞான பாதை (அறிவு), கர்ம பாதை (தன்னலமில்லாத சேவை) அல்லது கிரியா பாதை (தியான பயிற்சிகள்) இந்த கோவில், பரம்பொருளை அடைவதற்கான வாய்ப்பு மற்றும் மேடையை வழங்கிவிடும்.

இந்த கோவிலில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது அன்னதானம், மாடு மற்றும் கன்றுகளுக்கான கோசாலையாக செயல்படும். இரண்டும் கர்ம யோக பாதைக்காக (தன்னலமற்ற சேவை) ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஒரு இல்லம் அல்லது காப்பகம், ஆதரவற்ற பெண்களுக்காக செயல்படும். இந்த பெண்களில் பெரும்பாலானோர் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், இவர்களில் பலர் பிருந்தாவனத்தின் பகுதியைச் சேர்ந்தவர்கள் . இவர்களுக்கு மருத்துவம் மற்றும் வாழ்வாதாரம் தேவைப்படுகிறது. நமது காப்பகம் இந்த பெண்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. அவர்களை மரியாதையோடு அன்பாக அரவணைக்கும்.

ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகள்

flute and feather
இந்த பணியில் உங்களுக்கான வாய்ப்புகள்- உங்களுடைய சக்தி மற்றும் ஈடுபாட்டிற்கு தகுந்த வாய்ப்புகள் உள்ளன. இப்போது நீங்கள் நேரடியாக கட்டுமான கற்கள், மரம் மற்றும் இடத்திற்காக நன்கொடையை வழங்கலாம்.
இந்த உயர்வான திட்டம் செயல்பாட்டுக்கு வர கொடை அளித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! உங்கள் மற்றும் உங்களுடைய ஆருயிர் சொந்தங்களின் அன்பில் பகவான் ஸ்ரீ கிருஷ்ண னின் ஆலயம் நிறையட்டும். மற்றும் உங்களது அன்புக்குரியவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டு. மோகன்ஜி மற்றும் குருமண்டலத்தின் நிறைந்த கருணை உங்களுடைய அன்பில் நிறைந்திருக்கட்டும்.
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: vguruvayur@mohanji.org
கோவில் கட்டுமானத்திற்காக கொடை அளிப்பது எப்படி பல தலைமுறையினரை ஆன்மீக முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறது என்பதை, பல இந்து மத நூல்கள் தெளிவாக கூறியுள்ளன. கீழே இந்த வாய்ப்பின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகள் மற்றும் இதனால் உலகில் நம்மால் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கம் பற்றிய சில வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது
ta_INTamil